Category Archives: சிந்தனை
இயற்கை போட்டி
மங்கும் மாலை பொழுது
புற்களின் பச்சை வண்ணமும்
மாலையின் மஞ்சள் வண்ணமும்
வர்ண போட்டியில்
வெற்றிபெற கடுமையாக
மோதிக்கொள்ளும் காட்சி.
மரங்களும் தங்கள் பங்கிற்காக
நிழலை
பூமியில் தெளித்து
கறுப்பு கொடி காட்டுகிறது
இயற்கைக்குள் போட்டி வேண்டாம்
என்பது போல்.
மனிதனுக்கு மட்டும் இது
ஒரு அழகான
மனநிம்மதியான
ரம்மியமான
குளிர்ச்சியான
வண்ணமிகு ஓவியமாக
தோன்றுகிறது.
இயற்கை என்றுமே நமக்கு
அழகாக தோன்றும்.
ஆனால் நாம் மட்டும் அதற்கு. ம்ம்ம்ம்ம்ம்ம்
அக்னி சிறகுகள்
கல்லடி காயங்கள் மறக்கலாம்
சொல்லடி ரணங்கள் காலம் முழுதும்
மறையா வடுவாகும்.
கண்ட அநுபவங்கள் மிகுதி,
சொன்னவர்களுக்கு இல்லை தகுதி.
விடிந்த பிறகு
கூவும் சேவலாக இருக்காதே.
சேவல் குரலுக்காகவும் காத்திராதே
காலம் கடந்துவிடும்.
உன்னையே கேட்டுப்பார்.
தன்னிச்சையாக விழித்துக்கொள்.
உன் மனக்குமுறளின் அக்னி
சுடர்களை
சிறகுகளாக பறக்கவிடு.
வழியில் ஒளியாக
அக்னி சிறகுகள் வழிகாட்டட்டும்.
சுதந்திர வானம் மட்டுமல்ல,
காலமும் உனக்காக
எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தடையில்லை
எதிர்ப்பு என்பது வெறும் வார்த்தையே,
எங்களுக்கு தடையில்லை.
எதிர்ப்பு
எங்களுக்கு ஊக்கம் தருகிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு கற்பனை திறனை வளர்கிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு மனவலிமை தருகிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு போராட்ட குணம் அளிக்கிறது
எதிர்ப்பு
எங்களை மென்மேலும் வளர்க்க பயன்படுகிறது.
மெருகேருவோம்,
போராடுவோம்,
வளர்ப்போம்,
வளருவோம்,
சுதந்திரமாக மகிழ்வோம்,
மகிழ்விப்போம்.
வீழ்வது நானாக இருந்தாலும்,
வெல்வது நாமாக இருப்போம்.
கற்றுக்கொள்ளவேண்டும்
முகக்கண்ணில் இருள்
சூழ்ந்திருந்தாலும்
அகக்கண் வெளிச்சம்
தெளிவான வழி காண்பிக்க
இலக்கை
அடைகின்றனர் பார்வையற்றோர்.