உணர்ச்சி தந்த வலியால், உள்ளம் தனியாக அழுகிறதே…
Category Archives: சிந்தனை
காரணம் நீயோ!!
உணர்ச்சி தந்த வலியால், உள்ளம் தனியாக அழுகிறதே…
ஆழமான உணர்வு
இரு மனங்களின் சங்கமம்
உள்ளம் அனுபவிக்கும் உணர்வு போதை..
வார்த்தைகள் மெளனமாகி
கண்கள் பேசும்
கவிதை…
புறக்கண் மூடி
அகக்கண் திறந்து
அன்பை ரசிக்கும்
அழகு….
தோல்வியை மட்டுமே
சந்தித்து
புண்பட்ட மனதை
வருடும் அழகான
தென்றல்…..
அழகை கண்ணால்
பார்க்காமல்
மனதால் பார்த்து,
நேசிக்கப்பட்டும்
நேசித்த
மகிழ்ச்சியின் உச்சம்……
நெருப்பை குளிர் போலவும்
குளிரை தணல் போலவும்
மாற்றும் சக்தி,
இயற்கையையே
ஏமாற வைக்கும்
அதிசயம் கண்களில்
காணும் கணத்தில்…….
உள்ள எண்ணத்தை
கண்ணாடியாக
பிரதிபளிக்கும் உதடுகள்
உதிர்க்கும் வார்த்தைகள்
வேதவாக்காக
மாறி,
கடவுளையும் காதலில்
காட்டும் சித்து விளையாட்டு……..
உடையில் மாற்றம்
நடையில் மாற்றம்
உணவில் மாற்றம்
பேச்சில் மாற்றம்
நடத்தையில் மாற்றம்
ஏன், மதத்திலும் கூட மாற்றம்
அனைத்தையும் கடந்து
மரணத்தையும் மறக்கடித்கிறது,
உள்ளத்தில் நேர்ந்த காதல் மாற்றம்………
கோடிகள் வேண்டாம்
பண்டபாத்திரம் வேண்டாம்
நகைகள் வேண்டாம்
வாகனம் வேண்டாம்
சாதிகள் வேண்டாம், சரி.
மாறாக,
பெற்றோர்கள்
கூட வேண்டாம்
என்று ஒதுக்கும்
காதல் அறிவிலித்தனமும் கூட……….
வாங்க ஐயா வாங்க
இந்த தேர்தலுக்காவது சீக்கிரம் சென்று உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள். காலதாமதம் ஆனால் உங்கள் வாக்கு உங்களால் பதிவு செய்ய இயலாது.
உங்களுக்கு போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ௪௯-ஓ (49-0). அதை பயன்படுத்துங்கள்.இது ஒரு அருமையான சட்டம்.
முடிவு தெரிகிறது……!
அதை
தேய்மானமடைய வைத்து,
கடைசியில் கூனாகி,
கையேந்தி நிற்கும்
அவலம்,
கண் முன்னே தெரிகிறது…….!!
விவாசாய நிலங்கள்
வீட்டு மனைகளாக
மாறும் பொழுது….!!
அரசியல் சக்கரம் சுழல
ஏற்றுக்கொள்வீர்களா??/
பனிப்போர் போல் மாறி,
பகையை மெல்ல வளரவைத்து,
காலம் கனிந்து வர காத்திருக்கும்…
சரியான காலத்தில் தன் வேலையை
காண்பிக்கும்
அதுவே துரோகம்…!
பேசி தீர்ப்போம்……
மௌனிக்கும் பொழுது
நரகத்தில்
நாம் தத்தளிப்பது
போன்று இருக்கும்…
மௌனமும் ஓர்
ஆயுதமே,
என்று அப்பொழுது விளங்கும்……